தேர்தலை முன்னிட்டு திமுக செய்யும் மிக மோசமான பிரசாரம் : பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், திமுக மோசமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தூண்டுதலின் பேரில் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

தவறான செய்தியை திமுக சுமத்துவதாகவும் அவர் கூறினார். எந்தவித ஆதாரமும் இல்லாமல், திமுக தேவையில்லாத பொய் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளதாகவும், இதற்கும் திமுகவுக்கும்தான் தொடர்பு உள்ளது என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், அதிமுக மீது  திமுக அவதூறு பரப்பி வருவதாக, காவல் துறை டிஜிபியிடம் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் புகார் மனு அளித்துள்ளார். அவதூறு பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதிமுகவினரை பழிவாங்கும் நோக்கில் திமுகவினர் செயல்படுவதாகவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version