திருநாவுக்கரசுக்கு ஜாமீன் வழங்க பொள்ளாச்சி நீதிமன்றம் மறுப்பு

பொள்ளாச்சியில் பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசுக்கு ஜாமீன் வழங்க பொள்ளாச்சி முதலாவது நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் வன்முறை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவரது தாயார் கடந்த 6ஆம் தேதி பொள்ளாச்சி முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆறுமுகம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறையில் உள்ள திருநாவுக்கரசிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை வந்த பிறகு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். ஜாமீன் வழங்கினால் குற்றவாளி வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கூறிய நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து, ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தார்.

Exit mobile version