பொள்ளாச்சி விவகாரத்தில் ஸ்டாலினிடம் ஆதரவு கேட்கும் குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு, திமுக தலைவர் ஸ்டாலினின் ஆதரவும், வழக்கறிஞர் மற்றும் நீதிபதியின் ஆதரவு வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ஆடியோவில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு, போலீசாரிடமோ அல்லது வழக்கறிஞரிடமோ உதவி கேட்பதில் தவறில்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினின் ஆதரவு கேட்டிருப்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளது.

Exit mobile version