பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் வீடுகளில் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளின் வீடுகளில் மத்திய புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு சொந்தமான சின்னப்பாளையம் பண்ணை வீட்டிலும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். குற்றவாளிகளின் உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரிடம் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மேலும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்கள் பற்றிய விவரங்களையும் பெற்றுச் சென்றதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக 5 குற்றவாளிகளின் வீடுகளிலும் தீவிர ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

Exit mobile version