பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்க திமுக முயற்சி

பொள்ளாச்சியில் நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்க திமுக முயற்சித்து வருவதாக, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

பொள்ளாச்சியில் நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு தவறான தகவல்களை தடுக்கக்கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் அவர் புகார் மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொள்ளாச்சி விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காக திமுக திசை திருப்புவதாக குற்றம்சாட்டினார்.

Exit mobile version