பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சபரி ராஜன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடி வசம் இருந்து சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், பொள்ளாச்சி எம்ஜிஆர் நகரில் உள்ள சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது வீட்டில் இருந்த சபரி ராஜனின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய இன்னும் பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version