வருமான வரித்துறை சோதனைக்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது!- அமைச்சர் ஜெயக்குமார்

திமுக-வினருக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனைக்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ராயுபுரம் தொகுதிக்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டையில் வீடு, வீடாக சென்று அமைச்சர் ஜெயக்குமார் வாக்கு சேகரித்தார். அப்போது, உணவகம் ஒன்றுக்கு சென்ற அமைச்சர் ஜெயக்குமார், அங்கு, அதிமுக நிர்வாகிகளுக்கு உணவு சமைத்து கொடுத்து அசத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுக-வினருக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனைக்கு, அரசியல் உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ ட்ரீம்ஸ் மூர்த்தி, 100 கோடி ரூபாய் அளவுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க இருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

Exit mobile version