தீபாவளி நெரிசலை கட்டுப்படுத்த புறக்காவல் நிலையம் அமைப்பு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகரில் தீபாவளி நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நகரில், தற்போது 300 கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட்டு வருவதாகவும், தற்காலிகமாக கும்பகோணம் நகரத்தை 8 பிரிவுகளாகப் பிரித்து, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தீபாவளி வரை சுமார் 250க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version