உரிய ஆவணங்கள் இல்லாமல் 6 கோடியே 38 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல்

ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 6 கோடியே 38 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் தடா அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிக் கொண்டிருந்தனர். மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கார் ஒன்றை போலீசார் சோதனை செய்த போது காரில் இருந்த 6 கோடியே 38 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

காரில் இருந்த மகேஷ், ஹரிபாபு இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், மேற்கு கோதாவரியை சேர்ந்த நகை வியாபாரி பிரவீன்குமார், சென்னையில் தங்கம் கொள்முதல் செய்வதற்காக பணத்தை கொடுத்து அனுப்பியதாக தெரிவித்தனர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை வருமானவரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Exit mobile version