ஒரகடத்தில் கடத்தப்பட்ட சிறுவனை 24 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை

சென்னை அடுத்த ஒரகடத்தில், கடத்தப்பட்ட சிறுவனை 24 மணிநேரத்தில் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

செங்கல்பட்டு அடுத்த சேந்தமங்கலத்தை சேர்ந்த குமரபிரசாத், புதனன்று, மதுபானக் கடைக்கு தமது 5 வயது மகனுடன் சென்றுள்ளார். போதை தலைக்கேறியதால் குழந்தையை பற்றி அவர் அக்கறைக் கொள்ளவில்லை. மர்ம நபர் ஒருவர் குழந்தையை எளிதாக கடத்திச் சென்றார். சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திய காவல்துறையினர், திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் ஒரு வீட்டில் இருந்து குழந்தையை மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

Exit mobile version