வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? போலீசார் விசாரணை

சேலத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு இமெயிலில் ஒரு தகவல் வந்தது. அதில், அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சற்று நேரத்தில் வெடித்து விடும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிர்ச்சி அடைந்த கிளை மேலாளர், பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வந்து, அலுவலகத்தின் ஒவ்வொரு மேஜை மற்றும் அலமாரிகளில் அங்குலம் அங்குலமாக மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டு சோதனை செய்தனர். இறுதியாக வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதை உறுதி செய்த போலீசார், இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Exit mobile version