பெண் கொரோனா நோயாளி வழக்கை, மர்ம மரணம் வழக்காக பதிவு செய்த காவல்துறை

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உயிரிழந்த பெண் கொரோனா நோயாளி வழக்கை, மர்ம மரணம் வழக்காக பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த சுமிதா என்ற பெண் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இதனிடையே 23 ஆம் தேதி மாயமாகிய அவர் கடந்த 8 ஆம் தேதி மருத்துவமனையின் 8 வது மாடியில் உள்ள மின்மாற்றி அறையில் இருந்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். நோயின் காரணமாகவே சுமிதா உயிரிழந்திருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் மர்ம மரண வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சுமிதா சிகிச்சை பெற்று வந்த காலகட்டத்தில் மருத்துவமனை பாதுகாவலர்கள் இருவர் தலைமறைவாகியதால், சுமிதாவின் உயிரிழப்பில் இவர்களுக்கு தொடர்பு உண்டா என்பது குறித்து போலீசார் விசாரணையை துவங்கியுள்ளதாக தெரிகிறது.

Exit mobile version