10 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

மதுரை அவனியாபுரத்தில் முன்விரோதம் காரணமாக நடைபெற்ற கொலையில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தை சேர்ந்த மாரி என்பவர் உறவினர் வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாரியை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே மாரி உயிரிழந்தார். தகவல் அறிந்த அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாரியின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாரியின் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன. முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version