காவலர்களை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கார்த்திகைபட்டியில், காவல்துறையினர் மீது ரவுடி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாதுகாப்பிற்காக காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவில்பட்டி போஸ் நகரைச் சேர்ந்த ரவுடி மாணிக்கராஜா மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை என 56 வழக்குகள் நிலுவையில் உள்ளன. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி மாணிக்க ராஜா பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரிவாளால் தாக்கப்பட்ட, காவலர்கள் செல்வகுமார் மற்றும் முகமது மைதீன் ஆகியோர், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Exit mobile version