பிரேசிலில் ஆரம்ப பள்ளிக்குள் நுழைந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு

பிரேசிலில் ஆரம்ப பள்ளி ஒன்றில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 மாணவர்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரேசில் நாட்டு தலைநகரான சாவ் பாலோ நகருக்குள் உள்ள சுஸானோ பகுதியில் பேராசிரியர் ரவுல் பிரேசில் ஆரம்ப பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் வகுப்புகள் தொடங்கிய நிலையில் கைகளில் துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்த இருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 மாணவர்கள் உள்பட 10 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரேசில் போலீசார் சம்பவ இடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version