போதையில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கிச் சூடு

நாகையில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு இருவரை துப்பாகியால் சுட்ட ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் ஆயுதப்படை காவலர் ஜெகன் ராஜா என்பவர் மதுபோதையில் மதி என்பவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை தட்டி கேட்ட ஊர் நாட்டாமை செல்வராஜின் கால்களில் ஜெகன்ராஜா துப்பாக்கியால் சுட்டுள்ளார். பொது மக்கள் சுற்றி வளைக்க முயன்ற போது துப்பாக்கி சூடு நடத்தி அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கியால் சுட்ட ஜெகன்ராஜாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version