காவல்துறை என கூறி ஒப்பந்ததாரர் வீட்டில் மர்ம கும்பல் சோதனை

மதுரையில் பிரபல ஒப்பந்ததாரர் வீட்டில் காவல்துறையினர் என கூறி 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கூடல்புதூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ஒப்பந்ததாரர் குணசேகரன். இவரது வீட்டிற்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் தங்களை காவல்துறையினர் எனவும், வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக கூறி சோதனை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய குணசேகரன் வீட்டை சோதனை செய்ய அனுமதியளித்துள்ளார். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம கும்பல், வீட்டிலிருந்து 170 சவரன் தங்க நகை, 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து விட்டு, மேலும் வங்கியில் உள்ள பணத்தையும் எடுத்து தரக்கூறி குணசேகரனை காரில் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் குணசேகரனை பாதி வழியிலேயே இறக்கி விட்டு மர்ம கும்பல் தப்பியோடியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குணசேகரன் கூடல்புதூர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரை தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Exit mobile version