நகை திருடனை 12 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறையினர்

சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியில், வீடு புகுந்து 15 சவரன் தங்க நகைகளை திருடிச்சென்ற கொள்ளையனை,காவல்துறையினர் 12 மணி நேரத்தில் கைது செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணி அனுமந்தராயன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சசிகலா. மாலை நேரத்தில் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த திருடன், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று, பீரோவில் இருந்த 15 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளான்.

வீடு திரும்பிய சசிகலா கொள்ளைபோனது குறித்து காவல் துறைக்கு புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட சென்னை ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர், மெரினாவில் சுற்றித்திரிந்த பிரகாஷ் என்பவனை கைது செய்தனர். மேலும் நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

Exit mobile version