கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பெண்ணை காவல்துறையினர் கைது

கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் வீட்டில் பத்து கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேல்மலை கிராமமான கவுஞ்சியில் பஞ்சு என்ற பெண்ணின் வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில்10 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், பஞ்சுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  மேல்மலை பகுதிகளில் தொடர்ந்து போதை வஸ்துக்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாக புகார் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், அவற்றை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

Exit mobile version