பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், நாளை நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட, தேசிய ஜனநாய கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். காலை11.30 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், தாராபுரம் தொகுதி வேட்பாளர் எல்.முருகன் உள்பட 13 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, பிரதமர் பேசுகிறார். பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Exit mobile version