கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி நாளை வருகை

கன்னியாகுமரியில் நாளை பிரதமர் மோடி பங்கேற்க இருந்த கட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு விழாவில் மட்டும் பங்கேற்க உள்ளார்.

பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகிறார். இதையொட்டி அகஸ்தீஸ்வரத்தில் பிரபல கல்லூரி மைதானத்தில் பிரதமர் பங்கேற்கும் இரண்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு நிகழ்ச்சியில் நாகர்கோவில் பார்வதிபுரம், மார்த்தாண்டம் மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அதன் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள மற்றொரு மேடையில் தமிழக பா.ஜ.க சார்பில் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தமிழக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க இருந்தனர்.

இந்தநிலையில் பாஜக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வழக்கம் போல பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version