மாநில முதலமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மத்திய – மாநில அரசுகள் கொரோனா தடுப்பு பணிகளை  தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் மாநிலங்களில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் குறித்தும், மாநில முதலமைச்சர்களுடன் காணொலி மூலம் பிரமதர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பரிசோதனை மையங்களை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனையின் போது விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. சிகிச்சைகளுக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களின் இருப்பு மற்றும் நிதிகள் குறித்தும் பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Exit mobile version