பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டுமக்களுக்கு உரை…

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, வருகிற 17-ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது. ஆனால் 45 நாட்களுக்கு மேலாகியும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. 

கொரோனா பாதிப்புக்கு பின்னர் 5-வது தடவையாக பிரதமர் மோடி நேற்று மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார். அப்போது கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஊரடங்கு 17ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்பு…
Exit mobile version