தூய்மை இந்தியா பணிக்காக அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு விருது

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவை சேர்ந்த பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் தூய்மை இந்தியா பணிக்காக உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள 50 கோடி மக்களுக்கு பாதுகாப்பான சுகாதார திட்டத்தை செயல்படுத்தியமைக்காக இந்த விருது வழங்கப்பட்டதாக கேட்ஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இந்த விருது கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு கிடைத்த மரியாதை என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த விருதை இந்திய மக்களுக்கு அர்ப்பணிப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Exit mobile version