2வது முறையாக வாரணாசியில் களம் காண்கிறார் பிரதமர் மோடி

வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் தாக்குதல் செய்யவுள்ளார். முன்னதாக, வாரணாசியில் உள்ள காலபைரவர் கோயிலில் மோடி வழிபாடு நடத்தினார். இதைத்தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள், பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின்னர் வாரணாசி ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற பிரதமர் மோடி, தனது வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.

Exit mobile version