மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை!

எல்லை பிரச்னையில் ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் சீனா ஈடுபட்டால் இந்தியா அமைதி காக்காது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து 21 மாநில முதலமைச்சர்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நேற்று நடத்தினார். பிரதமருடன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

Exit mobile version