தமிழ்நாடு உட்பட 10 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பீகார், குஜராத் உட்பட 10 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா பரவல், தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தமிழகம் சார்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Exit mobile version