மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சரவையில் உரம், ரசாயனம் மற்றும் விவகாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த அனந்த குமார், உடல்நலக் குறைவால் இன்று காலை பெங்களூருவில் காலமானார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அனந்தகுமாரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள மோடி, அனந்தகுமாரின் செயல்பாடுகள், அவர் ஆற்றிய பணிகள் என்றும் நம் நினைவில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version