பிரதமர் மோடிக்கு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி நன்றி

தனது கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டிற்கு கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்துகளை ஒதுக்கீடு செய்த பிரதமர் மோடிக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தனது கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டிற்கு கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு செய்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரெம்டெசிவிர் மருந்துக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு, இந்த அறிவிப்பு ஆறுதல் அளிக்கும் எனவும் கூறியுள்ளார். முன்னதாக, கடந்த 14ம் தேதி, தமிழகத்திற்கு கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்துகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version