பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கின் வருகையை ஒட்டி மாமல்லபுரத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கின் வருகையை ஒட்டி மாமல்லபுரத்தில் 7 அடுக்கு பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளது. இதனை மத்திய பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் வருகிற 11ம் தேதி முதல் 13-ம் தேதி வரை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஆகியோர் சந்தித்து பேச உள்ளனர். இதன் ஒரு நிகழ்வாக மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களையும் சுற்றி பார்க்க உள்ளனர். இரு நாட்டு தலைவர்களின் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வெண்ணை உருண்டை கல், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு குறித்து அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மாமல்லபுர சிற்பங்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் வெளியே நின்ற படி செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.

Exit mobile version