பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த மாதம் சந்திப்பு

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா – சீனா இடையயான இரண்டாவது உச்சி மாநாட்டையொட்டி இந்த சந்திப்பு நடைபெறுகிறது. அடுத்த மாதம் 11 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்கள் பிரதமர் மோடியும் – சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேசுகின்றனர்.

பேச்சுவார்த்தைக்கு இடையே இருநாட்டு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள புகழ்பெற்ற சிற்பங்களையும், வரலாற்று சின்னங்களையும் பார்வையிடுகின்றனர். பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்புக்கான ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version