சத்தீஸ்கரில் இன்று பிரதமர் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்

 

சத்தீஸ்கரில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இன்று மோடி மற்றும் ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல்கட்டமாக 18 தொகுதிகளுக்கு வரும் 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான பிரசாரம் சனிக்கிழமை மாலையுடன் நிறைவடைய உள்ளது.

இதையொட்டி பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடியும், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர் ராகுல் காந்தியும் இன்று பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். இதற்காக இன்று காலை டெல்லியிலிருந்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூருக்கு வருகிறார் மோடி. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பஸ்தார் மாவட்டம் ஜெகதால்பூருக்கு சென்று அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

அதே போன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2 நாள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளார்.

 

Exit mobile version