பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை சீன அதிகாரிகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் 11ம் தேதி பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேச உள்ளனர். அக்டோபர் 12, 13 ஆகிய தேதிகளில் இருநாட்டு தலைவர்களிடையே முக்கிய பேச்சு வார்த்தைகள் நடைபெற உள்ளது.

இதனையடுத்து பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் தங்க இருக்கும் நட்சத்திர விடுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு குறித்து சீன அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சீன பாதுகாப்பு துறை அதிகாரிகள், சுற்றுலா துறை அதிகாரிகள், உள்துறை அதிகாரிகள், வெளியுறவு துறை அதிகாரிகள் என 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அனைத்து இடங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது தமிழக காவல் உயர் அதிகாரிகள், மற்றும் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

Exit mobile version