ஆகஸ்ட் மாதத்திற்குள் பன்னாட்டு விமான சேவையை துவங்க திட்டம்!!!

ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு பன்னாட்டு விமானங்கள் சிலவற்றை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை எந்த தேதியில் மீண்டும் தொடங்கும் என்பதை உறுதியாக கூற முடியாது என்றும், தற்போதைய சூழலின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு பன்னாட்டு விமானங்கள் சிலவற்றை இயக்க திட்டமிடப் பட்டுள்ளதாக கூறினார். அதே போன்று நாளை முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்பதில் மாற்று கருத்து எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார். இந்நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களின் முதலமைச்சர்கள், மே 31ம் தேதி வரை உள்நாட்டு விமானங்களை இயக்க வேண்டாம் என்று பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version