குழந்தை உயிரிழந்த வழக்கில் குடும்பத்தினரை கொலை செய்ய திட்டம் !

கடலூர் மாவட்டம் தொப்புலிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த கமலம் என்பரது வீட்டில் வேலை செய்து வந்த உக்காண்டி – ராஜேஸ்வரி தம்பதியின் குழந்தை உயிரிழந்தது குறித்து, கமலம் குடும்பத்தினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், பிரதாப் மற்றும் அவனது கூட்டாளிகள், கமலம் குடும்பத்தினரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். இதனை அறிந்து கொண்ட கமலம் முன்னதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வீட்டில் மறைந்திருந்த காவல்துறையினர் கமலத்தை கொலை செய்ய வந்த பிரதாப் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் காவல்துறையினரை மிரட்டி கொலை கும்பல் தப்பிச்சென்றுள்ளது. விடியா ஆட்சியில் துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Exit mobile version