ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய திட்டம் ?

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரம் தொடர்பாக, சிபிஐ தொடர்ந்த வழக்கில், ப. சிதம்பரத்தை செப்டம்பர் 19-ம் தேதி வரை காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹார் உத்தரவித்ததையடுத்து, ப.சிதம்பரம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில், வரும் 20-ம் தேதி, சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, அமலாக்க துறை தொடர்ந்த வழக்கில் சரணடைய ப.சிதம்பரம் விரும்புவதாக தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Exit mobile version