கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டம்

சட்டப்பேரவை கூட்டத் தொடரை, ஒரு வாரம் முன்னதாகவே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த 13ஆம் தேதியும், வேளாண் நிதிநிலை அறிக்கை 14ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அதன் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக சட்டப்பேரவை நடைபெறும் நாட்களை குறைப்பது குறித்து சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம், கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அதில் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதியுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அதிகாரபூர்வமாக சபாநாயகர் சட்டப்பேரவையில் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

Exit mobile version