தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்த கடற்கொள்ளையர்கள்

வேதாரண்யம் அடுத்த ஆறு காட்டுத்துறையில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையை கடற்கொள்ளையர்கள் அறுத்து சென்றனர்.

நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் இருந்து கடந்த 26ஆம் தேதி மாலை சத்தியசீலன் என்பவருக்கு சொந்தமான படகில் அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கம், மணிகண்டன், சத்தியசீலன் ஆகிய மூவரும் பைபர் படகில் மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே இவர்கள் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் அவர்களின் வலையை அறுத்து சென்றனர். இதுகுறித்து மீன்வளத் துறை மற்றும் கடலோர காவல் படைக்கு மீனவர்கள் புகார் அளித்தனர். தமிழக மீனவர்களின் வலைகளை இலங்கை கடற் கொள்ளையர்கள் அறுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version