38வது நாளில் இளஞ்சிவப்பு, மஞ்சள் நிற பட்டாடையில் காட்சி கொடுக்கும் அத்திவரதர்

38-ஆவது நாளாக இன்று இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 38-ஆவது நாளான இன்று அத்திவரதர் இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். காலை 5  மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 9 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர். இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

Exit mobile version