சுற்றுலா பயணிகளை கவர்ந்த அன்னாசிப்பழ திருவிழா

மணிப்பூர் மாநிலம் கோகன் பகுதியில் நடைபெற்ற அன்னாசிப்பழ திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மணிப்பூரில் கோடையில் அதிகளவில் விளைவிக்கப்படும் அன்னாசி, பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் கோகன் பகுதியில் அன்னாசி மற்றும் கோடைகால பழங்களின் திருவிழா நடைபெற்றது. சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் என ஏராளமானோர் திருவிழாவை கண்டுகளித்ததோடு, தேவையான பழங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். பழ சாலட்டுகளையும் அவர்கள் ருசித்து மகிழ்ந்தனர். பழத் திருவிழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்குகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Exit mobile version