செயின் பறிக்க வந்த திருடர்களை தைரியமாக போராடி பிடித்த பெண்

பெண்களிடம் செயின் பறிக்க முயன்ற திருடர்களை தைரியமாக போராடி பிடித்த பெண்ணின் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் சாலையை கடக்க முயன்ற பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர். அப்போது அந்த பெண் தைரியமாக அந்த திருடனின் கையை பிடித்து இழுக்க, இதில் நிலைத்தடுமாறிய அந்த திருடர்கள் இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தனர்.

இதனையடுத்து அப்பகுதியிலிருந்த மக்கள் ஒருவனை பிடித்து தர்ம அடிக்கொடுக்க, மற்றொருவன் தப்பி ஓடியுள்ளான். தற்பொது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் அந்த பெண்ணின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version