மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக பிச்சுமணி நியமனம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக பிச்சுமணியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துனை வேந்தராக கே.பிச்சுமணியை தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார். இதற்கான பணி நியமன ஆணையை ஆளுநரை சந்தித்து பிச்சுமணி பெற்றுகொண்டார்.

பதவியேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு இந்த பதவியை அவர் வகிப்பார். 37 ஆண்டுகள அனுபவம் உடைய பிச்சுமணி, 3 புத்தகங்களையும் 190 ஆராய்ச்சி கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

Exit mobile version