ரஜினியுடன் புகைப்படம் எடுக்க வைப்பதாக கூறி பண மோசடி

ரஜினியுடன் புகைப்படம் எடுக்கும் ஆசையில் வழங்கிய ஒன்றரை லட்சம் ரூபாயை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாக சேலத்தை சேர்ந்த ரஜினி ரசிகர் மீது பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

சேலத்தை சேர்ந்த ரஜினி பழனி என்பவர் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் என கூறி கொண்டு சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், சேலத்தில் தங்கி வேலை செய்யும் பெங்களூருவை சேர்ந்த தமிழ்ச்செல்வி, முகநூல் மூலம் அறிமுகமாகி உள்ளார்.

இதையடுத்து, ரஜினியுடன் புகைப்படம் எடுக்க அழைத்து செல்வதாக கூறி, தமிழ் செல்வியிடம் ரஜினி பழனி 1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் தங்க கை செயின் ஆகியவற்றை வாங்கிக் கொண்டதாக தெரிகிறது.

ரஜினியை பார்க்க அழைத்துச் செல்லாததால் சந்தேகமடைந்த தமிழ்செல்வி, விசாரித்த போது, பலரிடம் ரஜினி பழனி இதுபோன்று ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து தனது பணத்தை திரும்ப கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்தாகவும், ரஜினி பழனி மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையில் அவர் புகார் தெரிவித்தார்.

Exit mobile version