தீவிரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பான புகைப்படம் வெளியீடு

பாலகோட்டில் தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

காஷ்மீரில் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் முகாம்கள் தகர்க்கப்பட்டதில், சுமார் 300 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு முன்பு இருந்த முகாம்களின் நிலை, குண்டு வீச்சுக்கு பிறகு அவை சேதம் அடைந்து இருப்பது புகைப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்திய போர் விமானங்கள் குண்டுகளை வீசியதால், பயங்கரவாத முகாம்களின் கட்டடங்கள் சேதம் அடைந்து இருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version