380வது சென்னை தினத்தை முன்னிட்டு சென்னை ஆழ்வார் பேட்டையில் சென்னையின் பழமையான புகைப்படங்கள் கண்காட்சி நடைபெற்றது.
சென்னை ஆழவார் பேட்டையில் நடைபெற்ற இந்த கண்காட்சியில், சென்னையின் பழமையான கட்டிடங்கள் வரலாற்று சிறப்புமிக்க புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது. வரலாறு பற்றிய ஆர்வமும், வரலாற்றை அறிந்து கொள்வதற்காகவும், அந்தக்காலத்து பழக்க வழக்கங்கள், அவர்களின் நாகரீகங்கள், உடைகள், உணவு முறைகள் மற்றும் அவர்கள் மேற்கொண்ட தொழில்கள் ஆகியற்றை அறிந்து கொள்வதற்காக மாணவர்கள் மிகவும் விருப்பத்துடன் இந்த கண்காட்சியை கண்டுகளித்தனர்.