பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகம் : கலக்கத்தில் வாகன ஓட்டிகள்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த இரண்டு வாரங்களாக ஏறுமுகத்தில் உள்ளதால் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் உள்ளனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ற வகையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அந்த வகையில் சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து இன்று 24 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 73 ரூபாய் 65 காசுகளாகவும், டீசல் 31 காசுகள் அதிகரித்து 69 ரூபாய் 14 காசுகளாகவும் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 3ஆம் தேதிக்கு பிறகு தொடர்ந்து இரு வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருவதால், வாகன ஓட்டிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Exit mobile version