பெட்ரோல், டீசல் விலை உயர்வு

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த பெட்ரோல், டீசல் விலை 4வது நாளாக அதிகரித்துள்ளது.

அண்மையில் பெட்ரோல், டீசல் விலை சரிவை சந்தித்து வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்திருந்தனர். ஆனால் கடந்த 4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர துவங்கிட்டன.சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 52 காசுகள் அதிகரித்து 72 ரூபாய் 39 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 63 காசுகள் அதிகரித்து 67 ரூபாய் 25 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்து வருவதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

Exit mobile version