நெல்லிக்குப்பம் அருகே சுவற்றில் மாம்பழம் சின்னம் வரையப்பட்டிருந்த 2 வீடுகள் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள வீடுகளின் சுவற்றில் பாமகவின் சின்னமான மாம்பழம் வரையப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு எய்தனூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வரையப்பட்டிருந்த மாம்பழ சின்னத்தை கீழ்பாதி கிராமத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் சிலர் அழிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களை தடுக்க முயன்ற இளைஞர்களையும் விசிகவினர் தாக்கினர். இந்தநிலையில் எய்தனூர் கிராமத்தில் மாம்பழ சின்னங்கள் வரையப்பட்டிருந்த இரு வீடுகள் மற்றும் ஒரு கார் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுக்களை வீசி தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்தை ஆய்வு செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.