மதுரையில் பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரையில் பாஜக பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநில பாஜக மகளிரணி தலைவி மகாலட்சுமியின் வீடு, மதுரை பங்கஜம் காலனி பகுதியில் உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், தாங்கள் கொண்டு வந்த பெட்ரோல் குண்டை, மகாலட்சுமியின் வீட்டின் முன்பு வீசி விட்டு தப்பியோடினர். இதில், வீட்டின் வெளிபகுதி மற்றும் நிறுத்தி வைத்திருந்த கார் சேதமடைந்தன.

தகவலறிந்து வந்த தெப்பகுளம் காவல்துறையினர், மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

Exit mobile version