இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் பெட்ரோல் குண்டு வீச்சு

இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் வாகனங்கள் எரிந்து நாசமாகின.

ஆரியகுளம் பகுதியில் நள்ளிரவில் வீடு ஒன்றின் மீது 8 பேர் கொண்ட மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவை எரிந்து நாசமாகின. வீட்டின் கண்ணாடிகள் மற்றும் கதவுகள் சேதமடைந்தன. வீட்டின் மீதும் மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Exit mobile version